Skip to main content

இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!

ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத  அளவு ஏற்படுகிறது.
🍍🍍🍍
வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2  முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.
 🥒🥒🥒
பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 🥑🥑🥑
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 🍒🍒🍒
ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும். பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகளை அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு பொடித்தும் பயன்படுத்தலாம்.

 🍇🍇🍇
ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன்  கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம்  பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
🍏🍏🍏
அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கலாம் அல்லது  வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.
 🍓🍓🍓
கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்🍓🍓🍓🍓🍓🍓

Comments

Popular posts from this blog

பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது?

பல்லில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் போக்கும் பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என தெரிந்துகொள்ள https://www.youtube.com/watch?v=iVyTuIW-Pr8

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல். இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… தேள் கடி மருந்துகள். எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் ...

மூலிகை குடிநீர்

பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். 🛐🛐🛐🛐🛐🛐 நிலவேம்புக் குடிநீர் எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும். நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம். ஆடாதோடை குடிநீர் காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும். 🛐🛐🛐🛐🛐🛐 ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மில...